Sunday, September 11, 2016

முரண்களின் வாழ்வு !





முரண்களின் வாழ்வு !
**********************************
* தன் பெயரை விரும்பாத
வழக்கறிஞர் 
அரிச்சந்திரன்
* இவர் பெயருக்குத்தான்
மருத்துவர் ...
வைத்தியநாதன்
* கசாப்பு கடை
உரிமையாளர்...
காந்தி !
* முதியோர் பென்ஷன்
கைநாட்டு போட்டாள்
சரஸ்வதி !
* குளம் காணவில்லை
ஊரின் பெயர் மட்டும் ....
தாமரைக்குளம் !
.............கா.ந.கல்யாணசுந்தரம்

Friday, June 10, 2016

நம்பிக்கை வாசல்

@ கடல்வெளி மணல்மேட்டில் 
புதைந்துகிடக்கிறது 
காதலின் ரகசியங்கள் 
 
@ வளையல் துண்டுகள் 
புழுவானது எப்போது ?
கொத்தும் கோழிகள் 
 
@ நினைக்கும் மனமின்றி 
காதலியின் போக்கு...
மறதியை மறந்ததால்  
 
@ அன்பொடு அகத்தூய்மை 
அழைத்துச் செல்லும் 
அறிவுச் சுரங்கத்தினுள் 
 
@ பலவீனமான சிந்தனை 
தகர்த்துவிடுகிறது 
வெற்றியின் படிகளை 
 
@ ஒப்பிடும் தன்மையால் 
உருக்குலைந்து போகிறது 
நம்பிக்கை வாசல்

.....கா.ந.கல்யாணசுந்தரம்.
 

Sunday, May 29, 2016

ஞான மரபில் ....

ஆயிரக் கணக்கில் 
அவல காட்சிகள் ...
மூடிய இமைக்குள் !


இதயம் கனத்து 
இடம்பெயர்ந்தது ...
பிரிவின் வலி ...!


தோளில் அமர 
துடித்தன சுமைகள்... 
இலகுவாய் !


நெற்றியில் உதிரும் 
வியர்வைத் துளியில்... 
உழைப்பின் வாடை !


வெற்றியின் படிகளை 
அடையாளம் கண்டன ...
தோல்வியின் கால்கள் !


மனித மனத்தின்
பெரும் பயணம்
ஞானமரபுகளைத் தேடி

நுண் அணுக்களின்
கூட்டுப் பொருட்கள்
பிரபஞ்சம்

ஆன்மீகத் தேடலில்
மூன்று வழித்தடங்கள்
பக்தி ஞானம் தியானம்

செயல்களின் வடிவம்
பிறப்பெடுக்கிறது...
நாம் யார் எனும் சிந்தனைகளில் !


குற்றமற்ற கலாச்சாரத்தில்
பதுங்கியுள்ளது
அறிவியல் வாழ்க்கை !


நவீன தகவல் தொடர்புகள்
அடையாளம் காட்டுகின்றன...
கலாச்சார சீரழிவுப் பாதைகளை !


இலக்கண இலக்கியங்களின்
பாரம்பரியத்தில் தோன்றியது...
தமிழ்மொழிக் குடும்பம் !


இன்றைய சோர்வை விலக்கும் 
திறனிருந்தால்...
நாளைய மலர்தல் நமக்காகவே !


அடக்கமெனும் அணிகலன்
அணிந்தவர்கள்...
அறத்தின் காவலர்கள் !


நற்செயல் நடப்பதெல்லாம்
நல்லோர்கள் முடிவெடுக்கும்
இறைத்தன்மை !


பயணத் திசைகளின்
வெற்றி இலக்குகள் 
நம்மிடமே !


இழப்பதற்கு ஒன்றுமில்லை
கொண்டுவந்தது
ஏதுமில்லை என்பதால் !


மனவமைதிப் பூங்காவில்
இடையிடையே ...
உறவுப் பாலங்கள் !


சொற்பகாலங்களின் 
வாழ்வுரிமை ...
குழப்பவாதிகளின் குதூகலம் !


மன இறுக்கத்தில் 
மேடைபோட்டு அமர்ந்துவிடுகிறது ...
இறுமாப்பும் கர்வமும் !


தன்னிலை மறந்தோர்கள்
முன்னிலை வகித்தாலும்
தழைக்காது தர்மவாழ்வு !


.....கா.ந.கல்யாணசுந்தரம் 




சிலம்புச் செய்திகள் குறும்பா வடிவில்....




*மரபுவழி மங்கள நாணொடு
புகாரில் மனையறம் கொண்டாள்...
கற்புக்கரசி கண்ணகி !



*மாசறு பொன்னுடன்
நல்லறம் சிறக்க இல்லறமானது...
கோவலனின் வாழ்வு !



*தன்னிலை மறக்கும்
சொர்க்கபுரியானது...
நரவுப்பட்டின வசந்தவிழா!



*விடுதலை அறியா
விருப்பினனாகினான்...
கோமகன் கோவலன்!



*யாழிசை மீட்டியபடி கடலாடிய
கானல்வரிப் பாடல்கள்...
கோவலனோடு மாதவி !

*ஆடல்மகள் மாதவியின் கூடலில்
குன்றமன்ன பொருளிழந்தான்...
குற்றமற்ற கண்ணகியின் கணவன்!



*ஊழ்வினை உறுத்த
மாதவியின் கரம் நெகிழ...
கோவலனின் அடுத்த பயணிப்பு !



*பயனின்றி போனது
மாதவிக்கு ...
தோழி வசந்தமாலையின் தூது !



*விடியும்முன் நெடும்பயணம்
கவுந்தி அடிகளோடு
மதுரை மாநகர்க்கு



*கௌசிகன் மாடலன் மாதரி
இவர்களுடன் வாழ்வு...
சிலகாலமே கண்ணகிக்கு !



*சூழ்ச்சிமிகு பொற்கொல்லன்
ஆராயாத அந்தப்புர அரசன் ...
கொலைக்களம் கண்டான் கோவலன் !



*ஒற்றைக் காற்சிலம்பு
மாணிக்கப்பரல் தெறிக்கும் சாட்சியால்...
நீதி பிறக்க மதுரை எரிந்தது !



*போற்றா ஒழுக்கம் புரிந்தாலும்
மாறா உளத்திரத்தால்
பாட்டுடைத் தலைவியானாள் கண்ணகி !



*மலைவளம் கண்ட சேரன்
செங்குட்டுவன் அமைத்தான் ...
பத்தினிக்கோட்டம் கண்ணகிக்கு !



........கா.ந.கல்யாணசுந்தரம்
.


பூங்காவில் ஓய்வெடுத்தன....


Friday, January 29, 2016

மகரந்தங்களின் வசந்தகாலம்....







மகரந்தங்களின் 
வசந்தகாலம்....
பட்டாம்பூச்சியின் அமர்வு !

டிஜிட்டல் உலகம்
அறுவடை செய்கிறது....
விவசாயிகளின் தற்கொலைகள் !

இசையின் சிகரங்களில் 
ஏகாந்த நிலைதரும் .....
சலங்கை ஒலி !

விண் காணும் தளிர்கள் 
மண் நோக்கி ....
சருகுகள் !


தியாக ஒளி பரப்பி 
என்றென்றும் நல்வழி காட்டும்....
தாயன்பு !

..........கா.ந.கல்யாணசுந்தரம்