Monday, August 29, 2011

சிந்தனை மலர்கள்!




















பூமியைக் காட்டி
குழந்தைக்கு சோறு ஊட்டினாள்...
நிலவில் தாய்!

விளையாடும் வயதை மறந்து
வயிற்றுப் பிழைப்பில் ...
பொம்மை விற்கும் சிறுமி!


கோலத்தை அழித்த மேகம்
அறிவுறுத்தியது....
புதியதொன்றை போடச்சொன்னது!

கொள்கைப் பிடிப்பின்றி எங்களை
பறக்கவிட்டால் மட்டும் போதுமா?
வெள்ளைப் புறாக்கள்!

வாடாமல் மணம்பரப்பி
தடம் பதிக்கின்றன...
சிந்தனை மலர்கள்!


............கா . ந.கல்யாணசுந்தரம்.

No comments: