Friday, September 2, 2011

மௌனம்....



ஒரு பிரபஞ்சத்தின்
அந்தரங்க மொழி...
மௌனம்!

அகத் தூய்மையும்
ஆன்ம பலமும்...
பொய்மை பேசாதிருத்தல்!

பாய்மரக் கப்பலில்
பயணிக்கிறோம்...
இலக்கைநோக்கி!

நீயும் ஒருநாள் என்னைப்போல்
சொன்னது...
கழற்றிய சட்டை!

....கா.ந.கல்யாணசுந்தரம்.

Monday, August 29, 2011

சிந்தனை மலர்கள்!




















பூமியைக் காட்டி
குழந்தைக்கு சோறு ஊட்டினாள்...
நிலவில் தாய்!

விளையாடும் வயதை மறந்து
வயிற்றுப் பிழைப்பில் ...
பொம்மை விற்கும் சிறுமி!


கோலத்தை அழித்த மேகம்
அறிவுறுத்தியது....
புதியதொன்றை போடச்சொன்னது!

கொள்கைப் பிடிப்பின்றி எங்களை
பறக்கவிட்டால் மட்டும் போதுமா?
வெள்ளைப் புறாக்கள்!

வாடாமல் மணம்பரப்பி
தடம் பதிக்கின்றன...
சிந்தனை மலர்கள்!


............கா . ந.கல்யாணசுந்தரம்.

புரிதல் ஹைக்கூ




தவமாய் தவமிருக்கும்
கூட்டுப்புழுவின் காத்திருப்பு....
ஒரு வண்ணமயமான வாழ்வுக்கு!

எங்களின் எதிர்காலம் அழிக்கப்பட்டதோ?
ரேகை அழிந்த நிலையில்....
உழைக்கும் கரங்கள்!

ஒரு தலைமுறைக்கான இடைவெளியில்
தொலைத்ததை மீண்டும் தேடுகிறது....
புன்னகை மறந்த மானுடம்!

பயணிக்கும் திசையில் மட்டுமில்லாமல்
வாழ்நாள் முழுவதும் வேண்டும் ...
ஒளிமயமான பசுமைக்காலம் !

பிரிந்தபோதுதான் தெரிந்தது
இன்பம் மட்டுமே அல்ல....
வாழ்க்கையின் புரிதல் !

.......கா.ந.கல்யாணசுந்தரம்.