Saturday, September 17, 2011

முதுமை உள்ளம்....




இருமலுடன் இரவைக் கழித்த
முதுமயின் இதயம் துடித்தது...
மகனே உறக்கம் கலைந்துபோனதா?

......கா.ந.கல்யாணசுந்தரம்.

நெஞ்சம் உணர்ந்தது...



அவளின் விரல் பட்டதும்
நெஞ்சம் உணர்ந்தது...
ஒரு புரிதலுக்கான பிரிவை!

......கா.ந.கல்யாணசுந்தரம்.


உள்ளம் மட்டும்....



ஊஞ்சலில் ஆட அமர்ந்தும்
அவனை நினைத்து அவளின்....
உள்ளம் மட்டும் ஊசலாடியது

...கா.ந.கல்யாணசுந்தரம்.

நாராய் நாராய் செங்கால் நாராய்.....





பனங்கிழங்கு அலகுகளால்
மீன்பிடித் தொழில்...
செங்கால் நாரைகள்!


....கா.ந.கல்யாணசுந்தரம் .

புன்னகை மறந்த மானுடம்
















ஒரு தலைமுறைக்கான இடைவெளியில்
தொலைத்ததை மீண்டும் தேடுகிறது....
புன்னகை மறந்த மானுடம்!


........கா.ந.கல்யாணசுந்தரம்.

Wednesday, September 14, 2011

மழலையின் அறிவிப்பு




அச்சமும் நாணமும்
பெண்மையின் இலக்கணமென ...
அறிவுறுத்தும் மழலை!

அடுத்தவேளை



அடுத்தவேளை
உணவுக்கில்லை...
சமைந்தாள் மகள் !

பாலில் நெல்



பாலில் நெல்
கலந்தபோது....
பதறியது பாலாடை!

Sunday, September 11, 2011

சரியான மருத்துவம் இல்லை...



வாதநோய்க்கு இன்னும்
சரியான மருத்துவம் இல்லை...
தீவிரவாதம்!