Thursday, September 20, 2012

என்ன தவம் செய்தோம்




என்ன தவம் செய்தோம் 
ஏணிப்படிகளாவதற்கு...
பெருமிதத்தில்  மூங்கில்கள் !
 
 
...........கா.ந கல்யாணசுந்தரம் 

பிரிந்து செல்லும் பாதைகள்

 
 
 
 
 
 
 
 
 
 
பிரிந்து செல்லும் பாதைகள்
எப்போதும் சந்தித்துக்கொள்கின்றன...
பிரிந்த இடத்தில் !

ஒரு பனிபொழிந்த காலை
துல்லியமாய் கேட்கிறது...
மலர்களின் சிரிபொலி !

உதிர்ந்த இறகினில்
உறங்காமல் விழித்திருக்கிறது...
ஒரு பறவையின் தேடல் !

ஆற்றுப் படுகை நாணலிடம்
கேட்கத் தோன்றுகிறது..
புயலின் வலிமையை !

கிராமிய மணம் கமழும்
உயிரோவியங்களுடன் ...
மாலை நேரத்து ஏரிக்கரை !

..........கா.ந.கல்யாணசுந்தரம்.