தமிழ் ஹைக்கூ கவிதைகள்
கா.ந.கல்யாணசுந்தரம்
Thursday, September 20, 2012
என்ன தவம் செய்தோம்
என்ன தவம் செய்தோம்
ஏணிப்படிகளாவதற்கு...
பெருமிதத்தில் மூங்கில்கள் !
...........கா.ந கல்யாணசுந்தரம்
பிரிந்து செல்லும் பாதைகள்
பிரிந்து செல்லும் பாதைகள்
எப்போதும் சந்தித்துக்கொள்கின்றன...
பிரிந்த இடத்தில் !
ஒரு பனிபொழிந்த காலை
துல்லியமாய் கேட்கிறது...
மலர்களின் சிரிபொலி !
உதிர்ந்த இறகினில்
உறங்காமல் விழித்திருக்கிறது...
ஒரு பறவையின் தேடல் !
ஆற்றுப் படுகை நாணலிடம்
கேட்கத் தோன்றுகிறது..
புயலின் வலிமையை !
கிராமிய மணம் கமழும்
உயிரோவியங்களுடன் ...
மாலை நேரத்து ஏரிக்கரை !
..........கா.ந.கல்யாணசுந்தரம்.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)