நாணல் இசைத்த பாடல்
தெரிந்திருக்கிறது...
நதிக்கரைக்கு மட்டும் !
மூங்கில் வேர்களை
மறக்கமுடியுமா?
புல்லாங்குழலின் நினைவுகள் !
ஆற்றின் கரங்களை
முத்தமிட நினைக்கின்றன ...
அலை வருடிய கூழாங்கற்கள்!
தள்ளினாலும் நீர் விலகாது
எனைத் தழுவி பயணிக்கிறது ....
பேசும் படகுத் துடுப்புகள்!
வீசாத வலைக்குள்
சிக்குண்டு தவிக்கிறது....
ஒரு மீனவனின் பசி !
.............கா.ந.கல்யாணசுந்தரம்.
தெரிந்திருக்கிறது...
நதிக்கரைக்கு மட்டும் !
மூங்கில் வேர்களை
மறக்கமுடியுமா?
புல்லாங்குழலின் நினைவுகள் !
ஆற்றின் கரங்களை
முத்தமிட நினைக்கின்றன ...
அலை வருடிய கூழாங்கற்கள்!
தள்ளினாலும் நீர் விலகாது
எனைத் தழுவி பயணிக்கிறது ....
பேசும் படகுத் துடுப்புகள்!
வீசாத வலைக்குள்
சிக்குண்டு தவிக்கிறது....
ஒரு மீனவனின் பசி !
.............கா.ந.கல்யாணசுந்தரம்.
3 comments:
அனைத்து கவிதைகளும் அருமை
வீசாத வலைக்குள் தவிக்கும் மீனவனின் பசி அற்புதமாக இருக்கு.
வணக்கம்!
சின்னக் கவிதைகள் என்னைக் கவா்ந்தன!
இன்னும் இனிக்க எழுது!
Post a Comment