Sunday, May 29, 2016

சிலம்புச் செய்திகள் குறும்பா வடிவில்....




*மரபுவழி மங்கள நாணொடு
புகாரில் மனையறம் கொண்டாள்...
கற்புக்கரசி கண்ணகி !



*மாசறு பொன்னுடன்
நல்லறம் சிறக்க இல்லறமானது...
கோவலனின் வாழ்வு !



*தன்னிலை மறக்கும்
சொர்க்கபுரியானது...
நரவுப்பட்டின வசந்தவிழா!



*விடுதலை அறியா
விருப்பினனாகினான்...
கோமகன் கோவலன்!



*யாழிசை மீட்டியபடி கடலாடிய
கானல்வரிப் பாடல்கள்...
கோவலனோடு மாதவி !

*ஆடல்மகள் மாதவியின் கூடலில்
குன்றமன்ன பொருளிழந்தான்...
குற்றமற்ற கண்ணகியின் கணவன்!



*ஊழ்வினை உறுத்த
மாதவியின் கரம் நெகிழ...
கோவலனின் அடுத்த பயணிப்பு !



*பயனின்றி போனது
மாதவிக்கு ...
தோழி வசந்தமாலையின் தூது !



*விடியும்முன் நெடும்பயணம்
கவுந்தி அடிகளோடு
மதுரை மாநகர்க்கு



*கௌசிகன் மாடலன் மாதரி
இவர்களுடன் வாழ்வு...
சிலகாலமே கண்ணகிக்கு !



*சூழ்ச்சிமிகு பொற்கொல்லன்
ஆராயாத அந்தப்புர அரசன் ...
கொலைக்களம் கண்டான் கோவலன் !



*ஒற்றைக் காற்சிலம்பு
மாணிக்கப்பரல் தெறிக்கும் சாட்சியால்...
நீதி பிறக்க மதுரை எரிந்தது !



*போற்றா ஒழுக்கம் புரிந்தாலும்
மாறா உளத்திரத்தால்
பாட்டுடைத் தலைவியானாள் கண்ணகி !



*மலைவளம் கண்ட சேரன்
செங்குட்டுவன் அமைத்தான் ...
பத்தினிக்கோட்டம் கண்ணகிக்கு !



........கா.ந.கல்யாணசுந்தரம்
.


பூங்காவில் ஓய்வெடுத்தன....


Friday, January 29, 2016

மகரந்தங்களின் வசந்தகாலம்....







மகரந்தங்களின் 
வசந்தகாலம்....
பட்டாம்பூச்சியின் அமர்வு !

டிஜிட்டல் உலகம்
அறுவடை செய்கிறது....
விவசாயிகளின் தற்கொலைகள் !

இசையின் சிகரங்களில் 
ஏகாந்த நிலைதரும் .....
சலங்கை ஒலி !

விண் காணும் தளிர்கள் 
மண் நோக்கி ....
சருகுகள் !


தியாக ஒளி பரப்பி 
என்றென்றும் நல்வழி காட்டும்....
தாயன்பு !

..........கா.ந.கல்யாணசுந்தரம் 

Tuesday, September 1, 2015

முதல் கைவினைப்பொருள் ...

தேசத்தின்
முதல் கைவினைப்பொருள் ...
தூக்கனான் குருவிக்கூடுகள் !
.............கா.ந.கல்யாணசுந்தரம்.

நிழல்கள்

இரவின் மடியில் உறங்கும்
பகலவனின் பிள்ளைகள் ...
நிழல்கள் !
............கா.ந.கல்யாணசுந்தரம்

Tuesday, February 5, 2013

மழலைகளின் கையசைப்பில்

 
 
 
 
மழலை மொழியறியாது
மகிழ்வோடு பழகின...
பொம்மைகள் !

மழலைகளின் கையசைப்பில்
மண்டிக்கிடந்தது....
மனிதநேயம்!

இறைவனின் பங்களிப்பாய்
இல்லங்களில் மலர்ந்திருந்தது
மழலை மொழி !

நடைவண்டிக்கு
தெரிந்திருந்தது....
குழந்தை வளர்ப்பு!

ஒரு மரப்பாச்சியின்
முதல் கனவு...
மழலைக்கு தாயானது!



........கா.ந.கல்யாணசுந்தரம்