Wednesday, November 28, 2012

ஒரு புதுக்கவிதையாய்









ஒரு புதுக்கவிதையாய் 
காலைப்பனி மேய்கின்ற... 
கிராமத்து களத்துமேடு!

ஒற்றைக்காலில் நின்றபடி 
வயிற்றுப் பசிக்கான தவம் 
ஆற்றுப்படுகை கொக்குகள் !

இளஞ்சூரியனை
பங்குபோட்டு குதூகலிக்கும் 
தென்னை ஓலைகள் !

எங்களுக்கேது விடுமுறை
வானில் எழும்.... 
இரைதேடும் பறவைகள்!

அன்றலர்ந்த மலர்களை 
விட்டு வையுங்கள்....
தேனருந்தும் வண்டினம்!

..........கா.ந.கல்யாணசுந்தரம்.

Thursday, September 20, 2012

என்ன தவம் செய்தோம்




என்ன தவம் செய்தோம் 
ஏணிப்படிகளாவதற்கு...
பெருமிதத்தில்  மூங்கில்கள் !
 
 
...........கா.ந கல்யாணசுந்தரம் 

பிரிந்து செல்லும் பாதைகள்

 
 
 
 
 
 
 
 
 
 
பிரிந்து செல்லும் பாதைகள்
எப்போதும் சந்தித்துக்கொள்கின்றன...
பிரிந்த இடத்தில் !

ஒரு பனிபொழிந்த காலை
துல்லியமாய் கேட்கிறது...
மலர்களின் சிரிபொலி !

உதிர்ந்த இறகினில்
உறங்காமல் விழித்திருக்கிறது...
ஒரு பறவையின் தேடல் !

ஆற்றுப் படுகை நாணலிடம்
கேட்கத் தோன்றுகிறது..
புயலின் வலிமையை !

கிராமிய மணம் கமழும்
உயிரோவியங்களுடன் ...
மாலை நேரத்து ஏரிக்கரை !

..........கா.ந.கல்யாணசுந்தரம்.

Friday, April 13, 2012

அற்புத சிலையின்.....





கல்லுடன் உளி

உறவாடியது....

அற்புத சிலையின் பிறப்பு!

.............கா.ந.கல்யாணசுந்தரம்

Sunday, September 25, 2011

இல்லம் நிறைந்திருந்தது

இல்லம் நிறைந்திருந்தது
பொன்பொருளால் அல்ல...
மழலைச் சொற்களால்!

....கா.ந.கல்யாணசுந்தரம்.




இறைவா...உனக்கு வாகனமாய்
இருப்பதைவிட குடையாய் இருப்பேன்....
பாரம் சுமப்பவருக்கும் நிழல்தரவே!

.....கா .ந .கல்யாணசுந்தரம் .

நட்பின் இலக்கணம்!



 
 
 
பிரித்து எழுதி
பொருள் கூற முடியாது...
நட்பின் இலக்கணம்!

 
 
.....கா.ந.கல்யாணசுந்தரம்.