Saturday, September 17, 2011

புன்னகை மறந்த மானுடம்
















ஒரு தலைமுறைக்கான இடைவெளியில்
தொலைத்ததை மீண்டும் தேடுகிறது....
புன்னகை மறந்த மானுடம்!


........கா.ந.கல்யாணசுந்தரம்.

Wednesday, September 14, 2011

மழலையின் அறிவிப்பு




அச்சமும் நாணமும்
பெண்மையின் இலக்கணமென ...
அறிவுறுத்தும் மழலை!

அடுத்தவேளை



அடுத்தவேளை
உணவுக்கில்லை...
சமைந்தாள் மகள் !

பாலில் நெல்



பாலில் நெல்
கலந்தபோது....
பதறியது பாலாடை!

Sunday, September 11, 2011

சரியான மருத்துவம் இல்லை...



வாதநோய்க்கு இன்னும்
சரியான மருத்துவம் இல்லை...
தீவிரவாதம்!

Saturday, September 10, 2011

விதைக்குள் விருட்சம்



விருட்சங்களைக் காப்பாற்றுங்கள்
காரணம் விதைகள் வேண்டும்....
விருட்சங்களை எப்போதும் காண!

Tuesday, September 6, 2011

அந்தர வாழ்க்கை.....

கால் வயிற்றுக் கஞ்சிக்கு
கயிற்றில் அந்தர வாழ்க்கை...
தூக்கிலிடு சமுதாயத்தை !

......கா.ந.கல்யாணசுந்தரம்.