Showing posts with label ஹைக்கூ. Show all posts
Showing posts with label ஹைக்கூ. Show all posts

Thursday, December 6, 2018

ஹைக்கூ கவிதைகள்


ஒரு கோப்பை தேனிர் 
பகிர்ந்து அருந்தியதால் 
வாழ்க்கைப்பயணம் 

...கா.ந.கல்யாணசுந்தரம் 









வசந்தத்தின் வருகையை 
முன்னதாக அறிந்திருந்த 
உதிரும் இலைகள் 

....கா.ந.கல்யாணசுந்தரம் 

Wednesday, December 21, 2016

தமிழ் ஹைக்கூ கவிதைகள்





மனசெல்லாம் நூல் வெளியீடு

20.11.2016 அன்று சேலம் ரோட்டரி அரங்கில் சேலம் வாசகன் பதிப்பகத்தாரால் எனது மனசெல்லாம் ஹைக்கூ கவிதை நூல் திருவாளர் லேனா தமிழ்வாணன் மற்றும் ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் ஸ்டாலின் குணசேகரன் அவர்களால் வெளியிடப்பட்டது. அருகில் வாசகன் பதிப்பக உரிமையாளர் திரு.ஏகலைவன் அவர்கள்.

Sunday, May 29, 2016

சிலம்புச் செய்திகள் குறும்பா வடிவில்....




*மரபுவழி மங்கள நாணொடு
புகாரில் மனையறம் கொண்டாள்...
கற்புக்கரசி கண்ணகி !



*மாசறு பொன்னுடன்
நல்லறம் சிறக்க இல்லறமானது...
கோவலனின் வாழ்வு !



*தன்னிலை மறக்கும்
சொர்க்கபுரியானது...
நரவுப்பட்டின வசந்தவிழா!



*விடுதலை அறியா
விருப்பினனாகினான்...
கோமகன் கோவலன்!



*யாழிசை மீட்டியபடி கடலாடிய
கானல்வரிப் பாடல்கள்...
கோவலனோடு மாதவி !

*ஆடல்மகள் மாதவியின் கூடலில்
குன்றமன்ன பொருளிழந்தான்...
குற்றமற்ற கண்ணகியின் கணவன்!



*ஊழ்வினை உறுத்த
மாதவியின் கரம் நெகிழ...
கோவலனின் அடுத்த பயணிப்பு !



*பயனின்றி போனது
மாதவிக்கு ...
தோழி வசந்தமாலையின் தூது !



*விடியும்முன் நெடும்பயணம்
கவுந்தி அடிகளோடு
மதுரை மாநகர்க்கு



*கௌசிகன் மாடலன் மாதரி
இவர்களுடன் வாழ்வு...
சிலகாலமே கண்ணகிக்கு !



*சூழ்ச்சிமிகு பொற்கொல்லன்
ஆராயாத அந்தப்புர அரசன் ...
கொலைக்களம் கண்டான் கோவலன் !



*ஒற்றைக் காற்சிலம்பு
மாணிக்கப்பரல் தெறிக்கும் சாட்சியால்...
நீதி பிறக்க மதுரை எரிந்தது !



*போற்றா ஒழுக்கம் புரிந்தாலும்
மாறா உளத்திரத்தால்
பாட்டுடைத் தலைவியானாள் கண்ணகி !



*மலைவளம் கண்ட சேரன்
செங்குட்டுவன் அமைத்தான் ...
பத்தினிக்கோட்டம் கண்ணகிக்கு !



........கா.ந.கல்யாணசுந்தரம்
.


பூங்காவில் ஓய்வெடுத்தன....


Friday, January 29, 2016

மகரந்தங்களின் வசந்தகாலம்....







மகரந்தங்களின் 
வசந்தகாலம்....
பட்டாம்பூச்சியின் அமர்வு !

டிஜிட்டல் உலகம்
அறுவடை செய்கிறது....
விவசாயிகளின் தற்கொலைகள் !

இசையின் சிகரங்களில் 
ஏகாந்த நிலைதரும் .....
சலங்கை ஒலி !

விண் காணும் தளிர்கள் 
மண் நோக்கி ....
சருகுகள் !


தியாக ஒளி பரப்பி 
என்றென்றும் நல்வழி காட்டும்....
தாயன்பு !

..........கா.ந.கல்யாணசுந்தரம் 

Tuesday, September 1, 2015

முதல் கைவினைப்பொருள் ...

தேசத்தின்
முதல் கைவினைப்பொருள் ...
தூக்கனான் குருவிக்கூடுகள் !
.............கா.ந.கல்யாணசுந்தரம்.