Showing posts with label ஹைக்கூ. Show all posts
Showing posts with label ஹைக்கூ. Show all posts
Thursday, December 6, 2018
Wednesday, December 21, 2016
Sunday, October 16, 2016
Sunday, May 29, 2016
சிலம்புச் செய்திகள் குறும்பா வடிவில்....
*மரபுவழி மங்கள நாணொடு
புகாரில் மனையறம் கொண்டாள்...
கற்புக்கரசி கண்ணகி !
*மாசறு பொன்னுடன்
நல்லறம் சிறக்க இல்லறமானது...
கோவலனின் வாழ்வு !
*தன்னிலை மறக்கும்
சொர்க்கபுரியானது...
நரவுப்பட்டின வசந்தவிழா!
*விடுதலை அறியா
விருப்பினனாகினான்...
கோமகன் கோவலன்!
*யாழிசை மீட்டியபடி கடலாடிய
கானல்வரிப் பாடல்கள்...
கோவலனோடு மாதவி !
*ஆடல்மகள் மாதவியின் கூடலில்
குன்றமன்ன பொருளிழந்தான்...
குற்றமற்ற கண்ணகியின் கணவன்!
*ஊழ்வினை உறுத்த
மாதவியின் கரம் நெகிழ...
கோவலனின் அடுத்த பயணிப்பு !
*பயனின்றி போனது
மாதவிக்கு ...
தோழி வசந்தமாலையின் தூது !
*விடியும்முன் நெடும்பயணம்
கவுந்தி அடிகளோடு
மதுரை மாநகர்க்கு
*கௌசிகன் மாடலன் மாதரி
இவர்களுடன் வாழ்வு...
சிலகாலமே கண்ணகிக்கு !
*சூழ்ச்சிமிகு பொற்கொல்லன்
ஆராயாத அந்தப்புர அரசன் ...
கொலைக்களம் கண்டான் கோவலன் !
*ஒற்றைக் காற்சிலம்பு
மாணிக்கப்பரல் தெறிக்கும் சாட்சியால்...
நீதி பிறக்க மதுரை எரிந்தது !
*போற்றா ஒழுக்கம் புரிந்தாலும்
மாறா உளத்திரத்தால்
பாட்டுடைத் தலைவியானாள் கண்ணகி !
*மலைவளம் கண்ட சேரன்
செங்குட்டுவன் அமைத்தான் ...
பத்தினிக்கோட்டம் கண்ணகிக்கு !
........கா.ந.கல்யாணசுந்தரம்
.
Labels:
காப்பிய மலர்கள்,
குறும்பா,
சிலப்பதிகார செய்திகள்,
ஹைக்கூ
Friday, January 29, 2016
மகரந்தங்களின் வசந்தகாலம்....
மகரந்தங்களின்
வசந்தகாலம்....
பட்டாம்பூச்சியின் அமர்வு !
வசந்தகாலம்....
பட்டாம்பூச்சியின் அமர்வு !
டிஜிட்டல் உலகம்
அறுவடை செய்கிறது....
விவசாயிகளின் தற்கொலைகள் !
அறுவடை செய்கிறது....
விவசாயிகளின் தற்கொலைகள் !
இசையின் சிகரங்களில்
ஏகாந்த நிலைதரும் .....
சலங்கை ஒலி !
ஏகாந்த நிலைதரும் .....
சலங்கை ஒலி !
விண் காணும் தளிர்கள்
மண் நோக்கி ....
சருகுகள் !
மண் நோக்கி ....
சருகுகள் !
தியாக ஒளி பரப்பி
என்றென்றும் நல்வழி காட்டும்....
தாயன்பு !
என்றென்றும் நல்வழி காட்டும்....
தாயன்பு !
..........கா.ந.கல்யாணசுந்தரம்
Tuesday, September 1, 2015
முதல் கைவினைப்பொருள் ...
தேசத்தின்
முதல் கைவினைப்பொருள் ...
தூக்கனான் குருவிக்கூடுகள் !
முதல் கைவினைப்பொருள் ...
தூக்கனான் குருவிக்கூடுகள் !
.............கா.ந.கல்யாணசுந்தரம்.
Subscribe to:
Comments (Atom)











