Monday, August 29, 2011

புரிதல் ஹைக்கூ




தவமாய் தவமிருக்கும்
கூட்டுப்புழுவின் காத்திருப்பு....
ஒரு வண்ணமயமான வாழ்வுக்கு!

எங்களின் எதிர்காலம் அழிக்கப்பட்டதோ?
ரேகை அழிந்த நிலையில்....
உழைக்கும் கரங்கள்!

ஒரு தலைமுறைக்கான இடைவெளியில்
தொலைத்ததை மீண்டும் தேடுகிறது....
புன்னகை மறந்த மானுடம்!

பயணிக்கும் திசையில் மட்டுமில்லாமல்
வாழ்நாள் முழுவதும் வேண்டும் ...
ஒளிமயமான பசுமைக்காலம் !

பிரிந்தபோதுதான் தெரிந்தது
இன்பம் மட்டுமே அல்ல....
வாழ்க்கையின் புரிதல் !

.......கா.ந.கல்யாணசுந்தரம்.

No comments: