Friday, January 29, 2016

மகரந்தங்களின் வசந்தகாலம்....







மகரந்தங்களின் 
வசந்தகாலம்....
பட்டாம்பூச்சியின் அமர்வு !

டிஜிட்டல் உலகம்
அறுவடை செய்கிறது....
விவசாயிகளின் தற்கொலைகள் !

இசையின் சிகரங்களில் 
ஏகாந்த நிலைதரும் .....
சலங்கை ஒலி !

விண் காணும் தளிர்கள் 
மண் நோக்கி ....
சருகுகள் !


தியாக ஒளி பரப்பி 
என்றென்றும் நல்வழி காட்டும்....
தாயன்பு !

..........கா.ந.கல்யாணசுந்தரம்