Sunday, September 11, 2016

முரண்களின் வாழ்வு !





முரண்களின் வாழ்வு !
**********************************
* தன் பெயரை விரும்பாத
வழக்கறிஞர் 
அரிச்சந்திரன்
* இவர் பெயருக்குத்தான்
மருத்துவர் ...
வைத்தியநாதன்
* கசாப்பு கடை
உரிமையாளர்...
காந்தி !
* முதியோர் பென்ஷன்
கைநாட்டு போட்டாள்
சரஸ்வதி !
* குளம் காணவில்லை
ஊரின் பெயர் மட்டும் ....
தாமரைக்குளம் !
.............கா.ந.கல்யாணசுந்தரம்

No comments: