மழலை மொழியறியாது
மகிழ்வோடு பழகின...
பொம்மைகள் !
மழலைகளின் கையசைப்பில்
மண்டிக்கிடந்தது....
மனிதநேயம்!
இறைவனின்
பங்களிப்பாய்
இல்லங்களில் மலர்ந்திருந்தது
மழலை மொழி !
நடைவண்டிக்கு
தெரிந்திருந்தது....
குழந்தை வளர்ப்பு!
ஒரு மரப்பாச்சியின்
முதல்
கனவு...
மழலைக்கு தாயானது!
........கா.ந.கல்யாணசுந்தரம்
3 comments:
மிகவும் ரசிக்க வைத்தது...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/02/thalir-suresh-day-4-part2.html) சென்று பார்க்கவும்... நன்றி...
வலைச்சரம் வாயிலாக கவிகளை வாசிக்க வந்தேன் ...!!!
அழகான ஹைகூக்கள் ...!!!
தொடர வாழ்த்துக்கள் ...!!!
Post a Comment