Wednesday, December 5, 2012

நதிக்கரைக்கு மட்டும் !










நாணல் இசைத்த பாடல்
தெரிந்திருக்கிறது...
நதிக்கரைக்கு மட்டும் !

மூங்கில் வேர்களை
மறக்கமுடியுமா?
புல்லாங்குழலின் நினைவுகள் !

ஆற்றின் கரங்களை
முத்தமிட நினைக்கின்றன ...
அலை வருடிய கூழாங்கற்கள்!

தள்ளினாலும் நீர் விலகாது
எனைத் தழுவி பயணிக்கிறது ....
பேசும் படகுத் துடுப்புகள்!

வீசாத வலைக்குள்
சிக்குண்டு தவிக்கிறது....
ஒரு மீனவனின் பசி !

.............கா.ந.கல்யாணசுந்தரம்.

3 comments:

Niventh said...

அனைத்து கவிதைகளும் அருமை

சசிகலா said...

வீசாத வலைக்குள் தவிக்கும் மீனவனின் பசி அற்புதமாக இருக்கு.

http://bharathidasanfrance.blogspot.com/ said...

வணக்கம்!

சின்னக் கவிதைகள் என்னைக் கவா்ந்தன!
இன்னும் இனிக்க எழுது!