Wednesday, November 28, 2012

ஒரு புதுக்கவிதையாய்









ஒரு புதுக்கவிதையாய் 
காலைப்பனி மேய்கின்ற... 
கிராமத்து களத்துமேடு!

ஒற்றைக்காலில் நின்றபடி 
வயிற்றுப் பசிக்கான தவம் 
ஆற்றுப்படுகை கொக்குகள் !

இளஞ்சூரியனை
பங்குபோட்டு குதூகலிக்கும் 
தென்னை ஓலைகள் !

எங்களுக்கேது விடுமுறை
வானில் எழும்.... 
இரைதேடும் பறவைகள்!

அன்றலர்ந்த மலர்களை 
விட்டு வையுங்கள்....
தேனருந்தும் வண்டினம்!

..........கா.ந.கல்யாணசுந்தரம்.

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... இந்த தளத்திலும் Followers ஆகி விட்டேன்...

வாழ்த்துக்கள்... நன்றி...

கா.ந.கல்யாணசுந்தரம் said...

நன்றி தனபாலன் அவர்களே.