Sunday, September 25, 2011

இல்லம் நிறைந்திருந்தது

இல்லம் நிறைந்திருந்தது
பொன்பொருளால் அல்ல...
மழலைச் சொற்களால்!

....கா.ந.கல்யாணசுந்தரம்.




இறைவா...உனக்கு வாகனமாய்
இருப்பதைவிட குடையாய் இருப்பேன்....
பாரம் சுமப்பவருக்கும் நிழல்தரவே!

.....கா .ந .கல்யாணசுந்தரம் .

நட்பின் இலக்கணம்!



 
 
 
பிரித்து எழுதி
பொருள் கூற முடியாது...
நட்பின் இலக்கணம்!

 
 
.....கா.ந.கல்யாணசுந்தரம்.

Saturday, September 17, 2011

முதுமை உள்ளம்....




இருமலுடன் இரவைக் கழித்த
முதுமயின் இதயம் துடித்தது...
மகனே உறக்கம் கலைந்துபோனதா?

......கா.ந.கல்யாணசுந்தரம்.

நெஞ்சம் உணர்ந்தது...



அவளின் விரல் பட்டதும்
நெஞ்சம் உணர்ந்தது...
ஒரு புரிதலுக்கான பிரிவை!

......கா.ந.கல்யாணசுந்தரம்.


உள்ளம் மட்டும்....



ஊஞ்சலில் ஆட அமர்ந்தும்
அவனை நினைத்து அவளின்....
உள்ளம் மட்டும் ஊசலாடியது

...கா.ந.கல்யாணசுந்தரம்.

நாராய் நாராய் செங்கால் நாராய்.....





பனங்கிழங்கு அலகுகளால்
மீன்பிடித் தொழில்...
செங்கால் நாரைகள்!


....கா.ந.கல்யாணசுந்தரம் .

புன்னகை மறந்த மானுடம்
















ஒரு தலைமுறைக்கான இடைவெளியில்
தொலைத்ததை மீண்டும் தேடுகிறது....
புன்னகை மறந்த மானுடம்!


........கா.ந.கல்யாணசுந்தரம்.

Wednesday, September 14, 2011

மழலையின் அறிவிப்பு




அச்சமும் நாணமும்
பெண்மையின் இலக்கணமென ...
அறிவுறுத்தும் மழலை!

அடுத்தவேளை



அடுத்தவேளை
உணவுக்கில்லை...
சமைந்தாள் மகள் !

பாலில் நெல்



பாலில் நெல்
கலந்தபோது....
பதறியது பாலாடை!

Sunday, September 11, 2011

சரியான மருத்துவம் இல்லை...



வாதநோய்க்கு இன்னும்
சரியான மருத்துவம் இல்லை...
தீவிரவாதம்!

Saturday, September 10, 2011

விதைக்குள் விருட்சம்



விருட்சங்களைக் காப்பாற்றுங்கள்
காரணம் விதைகள் வேண்டும்....
விருட்சங்களை எப்போதும் காண!

Tuesday, September 6, 2011

அந்தர வாழ்க்கை.....

கால் வயிற்றுக் கஞ்சிக்கு
கயிற்றில் அந்தர வாழ்க்கை...
தூக்கிலிடு சமுதாயத்தை !

......கா.ந.கல்யாணசுந்தரம்.



Friday, September 2, 2011

மௌனம்....



ஒரு பிரபஞ்சத்தின்
அந்தரங்க மொழி...
மௌனம்!

அகத் தூய்மையும்
ஆன்ம பலமும்...
பொய்மை பேசாதிருத்தல்!

பாய்மரக் கப்பலில்
பயணிக்கிறோம்...
இலக்கைநோக்கி!

நீயும் ஒருநாள் என்னைப்போல்
சொன்னது...
கழற்றிய சட்டை!

....கா.ந.கல்யாணசுந்தரம்.